Posts

Showing posts from July, 2018

Apple Store Vs Google Play Store

உலகம் முழுவதும் திறன்பேசிகளின் இயங்குதளம் (OS) என்றால் இரு பெரு நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் Android மட்டுமே! இதைத்தாண்டி இருக்கலாம் ஆனால், அவை துக்கடா அரசியல் கட்சிகள் மாதிரி தான். Image Credit – https://www.technewsinc.com ஆப்பிள் ஆப்பிள் வசதியானவர்களைக் குறி வைத்துத் தயாரிக்கப்படும் சாதனங்கள். இதில் வன்பொருள் மென்பொருள் தரம் அபாரம். தன்னுடைய வாடிக்கையாளர்கள் குறைவு என்றாலும், தரத்தில் எந்தச் சமரசமும் செய்து கொண்டதில்லை. விலையைப் பற்றிக் கவலைப்படாமல் தரத்தை பற்றி மட்டுமே நினைப்பவர்கள், அதிகச் செலவு செய்ய நினைப்பவர்கள் ஆப்பிள் நிறுவன திறன்பேசி தான் வாங்குகிறார்கள். Android Android பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் அதிகச் செலவு செய்ய நினைக்காதவர்கள் அல்லது செய்ய முடியாதவர்கள். இதனால் ஆப்பிள் திறன்பேசியை அனைவரும் வெறுப்பவர்கள் என்ற அர்த்தமில்லை, விலை குறைத்து கிடைத்தால் வாங்க தயாராக இருப்பவர்களே! ஆனால், தரம் என்பதையும் தாண்டி எளிமையான பயன்பாடு, அதையொட்டிய வசதிகள், பல வகை திறன்பேசிகளை தேர்ந்தெடுக்கும் முறை என்பற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ஆப்பிள் திறன்ப...

சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில் மறைந்திருக்கும் அரசியல்?

Image
சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில் மறைந்திருக்கும் அரசியல் பற்றிய விவாதம் இப்போது நடந்து வருகிறது. இது மக்களுக்கான திட்டம் மக்களுக்கான திட்டம் என்று அரசு கொண்டுவரும் திட்டம் எல்லாம் மக்களுக்கு ஆனதாக,இருக்கிறது என்றால் அவை மக்களை நோகடிக்கும் திட்டங்களாகத் தான் இருக்கிறது. இந்நிலையில் சேலத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயண நேரத்தை குறைக்கிறேன் என்று தற்போது சென்னை டூ சேலம் எட்டு வழி பசுமைச் சாலை என்று புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது “மக்களுக்கான அரசு”. இந்த திட்டம் பல ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்றப்பட இருக்கிறது. அது ஒரு புறமிருக்க இந்தத் திட்டத்தால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி பல மலைகள் குடைந்து காணாமல் போகப் போகிறது என்பதாலும் இந்த எட்டு வழிச்சாலை பேரில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மிகப் பெரிய அளவில் கனிம வளங்கள் தாரைவார்க்கப் பட இருப்பதாலும் இதற்கு பலத்த எதிர்ப்புகள் தொடங்கி உள்ளது. இந்த அரசு, மக்களுக்கான திட்டம் மக்களுக்கான திட்டம் என்று பணத்தை கோடி கோடியாய் கொள்ளை அடிப்பதற்கான திட்டமாக மாற்றிக் கொள்கிறது. இந்நில...

நாம் அணியும் நகைகளும் அதன் உள்ளர்த்தங்களும்

Image
சாத்வீக உணவே (சைவ உணவு) உடலுக்கு உகந்த மருந்து ஆகும். நம் தமிழர் (தமிழர்களுடைய பண்பு, கலாச்சாரம்) பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக பல  விஞ்ஞான கருத்துகளை கொண்டிருப்பவை. அதுபோல  நகைகள்  நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை. நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கப்படுகிறது. எத்தனையோ பெறுமதியான பொருட்கள் இருந்த போதிலும், அதிகமான ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம், இந்தியா போன்ற கீழத்திய நாடுகள், பூமத்தியரேகைக்கு அண்மையில் இருப்பதால் வெப்பமான நாடுகளாகும். இந்த வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. மேலும் விவரங்களுக்கு  இங்கே  கிளிக் செய்யவும் அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலும் உள்ளது. அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும். தங்கத்தில் என்று இல்லாமல் (முத்...